Sathish Speaks

sathishkumar

Which Sector to Gain Most from Budget 2025?

Weekly Wealth Report Issue 180, Weekly Wealth Newsletter:  3rd Feb 2025 – 10th Feb 2025 (Weekly Wealth Newsletter and a Private Circulation from Creating Wealth Company)                                                                                Curated by Mr. Sathish Kumar Founder – Creating Wealth Company Crorepathi Creator | Financial Consultant | Author | Speaker | Columnist | Youtuber Phone – 9841058689   Mail – creatingwealthadvisory@gmail.com     Web – www.sathishspeaks.com Which Sector to Gain Most from Budget 2025? Download this NewsLetter as a PDF DOWNLOAD AS PDF In the last 3 years investors have made a lot of money in markets especially in cyclical, policy dependent and macro driven sectors like PSUs, Defence, Railways, Infrastructure, Energy, Utilities, Capital Goods etc. Before the budget came the following sectors down by 30% from their peaks and market was already rotating in favour of laggards of recent times like financials, IT, healthcare, chemicals etc. There have been concerns now for some time on slowing urban consumption. Zero Tax for the Salaried upto 12 Lakhs and the announcement of 8th Pay Commission and now leaving more money in the pockets of taxpayers all points towards prioritization of consumption part of the economy in the next year or two. This tax cuts from budget 2025 will trigger consumption from Middle Class and 8th Pay commission increments will trigger Consumer Durable Consumption in India for 2025 and 2026 This tax cut, will put 1 lakh crore in the hands of Middle Class and reports suggests that 80% of this money will be spent on Consumption. This means this is the best time for even lumpsum payments in to Mutual funds for long term Investing with diversifying appropriately. Most importantly, investing only those funds that won’t be needed for several years (At least 5 year). Happy Investing! Successful investment strategy requires regular reviewing and investor should buy funds at lower levels you can always reach us @ 78100 79946 for your portfolio review and rebalance Weekly Market Pulse Domestic equity markets rose after witnessing fall for three consecutive weeks as key benchmark indices BSE Sensex and Nifty 50 rose 1.72% and 1.80%, respectively The midcap segment closed the week in green, however, the small-cap segment closed the week in red. Domestic equity markets rose as sentiment was boosted after the RBI announced several measures to inject over Rs. 1 lakh crore liquidity into the banking system, which also raised the expectations of policy easing by the RBI in its Feb 2025 monetary policy meeting. Investors reacted positively to the Economic Survey 2025 tabled in the Parliament on Jan 31, 2025, that pegged GDP growth between 6.3% to 6.8% for FY26. However, lackluster domestic corporate earnings of Q3 FY25 and ongoing outflows by the foreign institutional investors, restricted the gains On the BSE sectoral front, BSE Realty, BSE Auto & BSE Bankex rose 6.46%, 3.12% & 2.80%, respectively, as theses rate sensitive sector gained following the RBI’s announcement to inject liquidity in the banking system Mutual Fund Corner Invesco India Equity Savings Fund Growth potential of equities. The net long equity exposure may help reap benefit of long term growth potential of equity Arbitrage opportunity. Each arbitrage position in equity has a corresponding exposure in stock future which helps in reducing risk. Fixed Income exposure. The exposure to fixed income aims to reduce volatility and generates stable income. Bottom up and top down approach, combining growth and value buys to generate consistent outcome through all market conditions Taxation treatment Maintains eligibility for equity taxation. Equity exposure to be maintained in the range of 65-80% 20-35% allocation in debt and money market instruments To invest in SIP & in Mutual Funds Click the link and start your investments instantly ( You can also call us @ 78100 79946 ) Start your Investment Stock of the Week Mahindra & MahindraCMP – 3100Target – 3599 ( In 12 – 18 Month’s Time Frame) Mahindra & Mahindra Ltd is one of the most diversified automobile company in India with presence across 2-wheelers, 3-wheelers, PVs, CVs, tractors & earthmovers. Healthy long term growth as Net Sales has grown by an annual rate of 7.14% and Operating profit at 17.70% With ROCE of 14.1, it has a Attractive valuation with a 3 Enterprise value to Capital Employed High Institutional Holdings at 68.21% With its market cap of Rs 3,83,026 cr, it is the second biggest company in the sector (behind Maruti Suzuki)and constitutes 32.10% of the entire sector The stock is trading at a discount compared to its average historical valuations Over the past year, while the stock has generated a return of 86.56%, its profits have risen by 10.4% ; the PEG ratio of the company is 3.1 The technical trend has improved from Mildly Bullish on 01-Feb-25 For your Equity Recommendation, Pls call us 78100 79946 Mutual Fund Course All you want to learn about Mutual Funds Kickstart your Investment Journey of 2025 from here What You will Learn:1. A-Z of Mutual Funds2. Master the Art of SIP’s3. Build Wealth Like a Pro4. Recorded session contains 8 Chapters in Tamil Language5. Lifetime Access Join Mutual Fund Course My First 1 Crore Club Still Wondering how a salaried person/professionals can make 1cr? Why do you have to join this Community? • Having money but still doesn’t know how & where to invest?• Selecting wrong Stocks?• Selecting wrong mutual funds?• Invested in all possible ways still money haven’t doubled? Join our First 1cr Club Webinar by payingjust 499/-  Join the ONE CRORE Club Stock Simplified Course All you want to learn about Stock MarketKickstart your Investment Journey of 2025 from here Key Highlights: 1. Key entry and exit points of the stock market2. 6-point filter to select a high-performing stock3. Learn macro-economic trends in stock picking Join the Stock Market Simplified Course This Week Media Publications

Which Sector to Gain Most from Budget 2025? Read More »

6 key mindsets for financial success and wealth building.

கோடிகளில்பணம் சம்பாதிக்க 6 முக்கிய   மனநிலைகள்..  உங்களிடம் இருக்கா?

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கும். அது ஏழையாக இருந்தாலும் சரி,கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பணத்திற்காகத் தான் வேலை செய்கிறோம். எனினும்பணக்காரர்கள் பணத்தின் பின்னால் ஓடுவதில்லை. ஆனால் அவர்கள் அதை முன்கூட்டியே திட்டமிட்டுஅதை அடைய வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகின்றனர். அவர்கள் விரும்பியதை அடைய சுதந்திரமாக செயல்படுகின்றனர். அந்த மனநிலையை வளர்த்துக் கொள்வதால் தான், அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். ஆக நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும், கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில்,   ஆறு குறிப்பிடத்தக்க தகுதிகளை உங்களுக்குள் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மன நிலை சிறப்பானதாக இருந்தால், அதுவே உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். அப்படி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 1 வெற்றிதான் முதல் இலக்கு நாம் எதை எடுத்துக்கொண்டாலும் வெற்றி என்பது இரு முறை நிகழும். முதல் வெற்றி மனதளவில் நடக்கும், இரண்டாவது வெற்றி நடைமுறையில் நடக்கும்.   பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு தொழிலை செய்வதில்லை. மாறாக அதில் சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான்  செயல்படுகிறார்கள். உதாரணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டும், விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ வேண்டும் என நினைத்தால்,இந்தியாவின் சிறந்த தொழிலதிபர் ஆன முகேஷ் அம்பானி ஆயுள் முழுக்க அவர் சம்பாதித்த சொத்துகளைசெலவு செய்தால் கூட, அவரால் அவரின் சொத்துகளை செலவழிக்க முடியாது. ஆனாலும் கூட இன்று வரையில்புதிய புதிய வணிகங்களை தொடங்குகிறார். முதலீடு செய்கிறார் எனில், ஏன்? ஏனெனில் அவர்வெற்றி என்ற இலக்கை அடைய துடிக்கிறார். அந்த மனநிலையில் தான் இருக்கிறார். அதுவே அவரின் பணம் மேலும் வளர உதவிகரமாக இருக்கிறது. ஆக இந்த வெற்றி மனநிலையை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பணத்தின் பின்னால் ஓடாமல், வெற்றியை நோக்கி பயணிக்கும் போது அதுவே நம் இலக்கை அடைய உதவிகரமாக இருக்கும்.  2  பிறரை கவர பந்தா வேண்டாம் இரண்டாவது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் நிகர சொத்து மதிப்பு என்கிற  நெட்வொர்த் ஆகும்.  ஒரு பணக்காரருக்கும் (Rich Man), செல்வந்தருக்கும் (Wealthy man) இடையில் உள்ள விஷயங்களை கவனித்து பாருங்கள், ஒரு பணக்காரர் மிக ஆடம்பரமாக கையில் தங்க கடிகாரம், தங்க ஆபரணம், விலை உயர்ந்த சொகுசு பென்ஸ் கார் என வைத்திருப்பார். ஆனால் அதை சரியாக பராமரிப்பதற்கு செலவிட வேண்டிய தொகை என்பது, எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். ஏனெனில் பென்ஸ் காரின் இன்ஷூரன்ஸ், மற்ற பராமரிப்பு செலவுகள் என்பது மிக அதிகம். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் மொத்த சொத்தின் மதிப்பை கணக்கிட்டால், செல்வந்தரை காட்டிலும் குறைவாகவே இருக்கும். ஆனாலும் சமுதாயத்தில் தங்களை முன்னிலைப் படுத்தி கொள்ள இத்தனையும் செய்வார்கள். இன்னும் இதை தெளிவாக நடைமுறை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பந்தா பேர்வழிகளாக இருப்பர். ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு வீழ்ச்சியை சந்திக்கிறார்கள் என்றால் அவ்வளவு தான். அதோடுஅவர்களின் சொத்து மதிப்பு தரைமட்டத்திற்கு சென்றுவிடும். அதிலிருந்து அவர்களால் மீள முடியாது. இதே ஒரு செல்வந்தரை பார்த்தால் மிக எளிமையாக இருப்பார். அவரும் பென்ஸ் கார் வைத்திருப்பார். ஆனாலும் அவர் அதை பராமரிப்பது எளிது. அவரின் வணிக தேவைக்காக அதை வாங்கியிருப்பார்.அவரின் சொத்து மதிப்பும் பணக்காரர்களை காட்டிலும் அதிகம் இருக்கும். அவர்கள் ஆடம்பரத்தை விடுத்து, தங்கள் நெட்வொர்த்தை எப்படி அதிகப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவார்கள். ஆக இதெல்லாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.  3. பணம் இருப்பதை வெளியில் காட்டாதீர்கள்..! பணம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள். பொதுவாக, நடுத்தர  மக்கள் பலரும் தங்களை எப்போதும் பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக்கொள்ள நினைப்பார்கள். அதற்காக பணக்காரர்கள் பயன்படுத்துவதை போல் விலை உயர்ந்த கார்,  ஸ்மார்ட் போன் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி குவிப்பர்.  தங்களிடமும் பணம் இருக்கிறது என்பதை இதன் மூலம் காட்டிக் கொள்வர். பணக்காரர்கள் போல ஆடம்பரமாக வாழ நினைப்பார்கள். அதற்காக கடன் வாங்கி விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பது இன்னொரு துரதிர்ஷ்டவசமான விஷயம்.  இது மிகப்பெரிய தவறு ஆகும். அதை  ஒருபோதும் நீங்கள்  செய்யாதீர்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.  ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துள்ளீர்களா? வங்கியில் பணம் வைத்திருக்கிறீர்களா? மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறீர்களா? விலை உயர்ந்த கார் வாங்கியிருக்கிறீர்களா?    அதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்.  ஆனால் மற்றவர்கள் இடத்தில் பகிராதீர்கள். அதை விடுத்து பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக் கொள்ள எதையும் செய்யாதீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ பழங்குங்கள். அதை விடுத்து கடனை வாங்கி செலவு செய்து அஸ்தஸ்தை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், அது உங்களை மேலும் சரிவுக்கே கொண்டு செல்லும். இது உங்களை எப்போதும் வளர விடாது. ஆக இந்த மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். 4 நீண்ட கால அடிப்படையில் யோசித்தல்..! பலரும் நினைப்பது குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும். உதாரணத்திற்கு மிக குறைந்த விலையில் இருக்கும் பென்னி பங்குகளை வாங்கிக் கொண்டு, அது ஒரே வருடத்தில் பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்க வேண்டும்எ ன்று நினைக்கிறார்கள். 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்துவிட்டு, 10% வருமானம் கிடைத்து, 11 லட்சம் ரூபாயாக எதிர்பார்த்தால் தவறில்லை. ஆனால் 10 லட்சம் ரூபாய் 10 கோடி ரூபாயாக அதிகரிக்கும்? என்று எதிர்பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு. 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு 15% வருமானம் கிடைக்கிறது எனில், 50 வருடத்தில் உங்கள் முதலீடு 100 கோடி ரூபாய் என்ற இலக்கை அடைந்திருக்கும். ஆனால் இப்படி யாரேனும் நீண்டகால அடிப்படையில் யோசிக்கிறோமா? என்றால் நிச்சயம் இல்லை. ஆக நீண்ட கால அடிப்படையில் உங்கள் இலக்குகளை உயர்ந்ததாக வைத்திருங்கள். அது உங்கள் பணம் வளர உதவிகரமாக இருக்கும். 40 வயதான ஒருவர் இப்போது 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, 50 வருடம் காத்திருந்தால், 90 வயதில் 100 கோடி ரூபாய் கிடைத்து என்ன பலன் என்ற கேள்வியும் எழலாம்.   ஆக இந்த வயதில் உங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். 50 ஆண்டுகள் என்பதை விடுத்து, 10, 15 ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள். ஆக நீண்ட கால அடிப்படையில் திட்டமிடல் என்பது மிக மிக அவசியமான ஒன்று. 5  ரிஸ்கை கணக்கிடுதல் பலரும் பங்குச் சந்தை என்றால் அது சூதாட்டம். மியூச்சுவல் ஃபண்ட் என்றால் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் முதலீடு ஆகும். அவற்றை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என பலரும் விலகியே இருக்கிறார்கள். என்னால் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது என கூறுவர். ஆனால் இது  மிக தவறானது. மாறாக வணிகமோ அல்லது முதலீடோ அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு  அதில் ஈடுபடலாம்.. இது வெற்றி பாதைக்கு கூட்டி செல்லும்.அதை விடுத்து எந்த முயற்சியும் செய்யாமல் வணிகம் என்றாலே நஷ்டம். பங்கு சந்தை என்றாலே சூதாட்டம் என்ற மன நிலை இருந்தால், அதில் வெற்றி பெறுவதும் கடினம். இதுவே  செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம் எனலாம். ஆக பிரச்னைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது புத்திசாலிதனமான ஒன்றாக இருக்கும்.  6 தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்..! செல்வந்தர் ஆக தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்; புதிதாக கற்றுக் கொண்டே இருங்கள். அது உங்களை அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துசெல்லும். கற்றுக் கொள்வதோடு விட்டுவிடாமல் அதை செயலிலும் சரியாக செயல்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு பலரும் பலவிதமான வணிக திட்டங்களை கூறுவார்கள். இதை செய்தால் அவ்வளவு லாபம் கிடைக்கும். இது இவ்வளவு லாபம் கிடைக்கும். இது சூப்பரான பிசினஸ் என கூறுவார்கள்.இதை அவரிடத்தில் கேட்டு செய்த நண்பர்கள் கூட அதை வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஆனால் வணிகம் பற்றி பேசியவர் பேசிக் கொண்டுதான் இருப்பார். இந்த மன நிலையை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். அதுவே உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். கற்றுக் கொண்டதை செயல்படுத்த தொடங்குங்கள். இந்த ஆறு மனநிலைகளை ஒருவர் கொண்டிருந்தாலே, அவர் கோடீஸ்வரர் ஆவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார் என்று அர்த்தம். மேலும், பணத்தை பெருக்க கற்றுக் கொண்டுள்ளார் எனலாம். #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கோடிகளில்பணம் சம்பாதிக்க 6 முக்கிய   மனநிலைகள்..  உங்களிடம் இருக்கா? Read More »

Financial planning for people over 40 to build wealth

பணி ஓய்வுக் காலம்: 40 வயதுக்கு பிறகு கோடிகள் சேர்ப்பது எப்படி?

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ எல்லோருக்குமே இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசை,  இளம் வயதில் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நிம்மதியாக, நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க வேண்டும்: அதற்கென ஒரு நிதியை சேமிக்க வேண்டும். அதன் மூலம் சம்பளம் போல மாதா மாதம் ஒரு தொகை கணிசமாக கிடைக்க வேண்டும். அதை வைத்து வாழ்வின் முதுமை காலத்தில்  நிதிச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என நினைப்பர். ஆனால் இதை எத்தனை பேர் சாத்தியமாக்கிக் கொள்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.   பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு..! பெரும்பாலும் நன்றாக சம்பாதிக்கும் காலத்தில் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்;  இன்னும் சில ஆண்டுகள் போகட்டும்; இன்னும் வருடங்கள் இருக்கின்றன என பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்வதை தவற விட்டு விடுவார்கள். ஆனால் முதுமை காலத்தில் ஓய்வெடுக்க முடியாமல் வேலைக்கு சென்று அல்லல்படுவதை பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது.  இப்படி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் எனில்,  உடனடியாக ஓய்வுக் காலம் பற்றிய சரியான திட்டமிடுதலை  மேற்கொள்ளுங்கள். . நம்மில் பெரும்பாலோர் சுமார் 40 வயது வாக்கில்தான் பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்வது பற்றி யோசிக்கிறார்கள். 40 வயதான ஒருவர் தன்னுடைய ஓய்வுக் காலத்திற்கு தேவையான தொகையை எப்படி சேமிப்பது? 40 வயதிற்கு பிறகு கோடிக்கணக்கான ரூபாயை சேர்ப்பது  என்பது சாத்தியமானதா? இதை எப்படி  நடைமுறைப்படுத்துவது? சரியான திட்டமிடல் அவசியம்…! பலரின் வாழ்க்கையில் நடுத்தர காலகட்டத்தில், ஏதேனும் எதிர்பாராத காரணங்களால் சம்பாதித்த முழு தொகையும் இழந்திருக்கலாம். அது விபத்தாக இருக்கலாம். நண்பர்களுக்கு கடன் கொடுத்து திரும்ப வாங்க முடியாமல் இருந்திருக்கலாம். சீட்டு போட்டு பணத்தை திரும்ப பெற முடியாமல் இருக்கலாம். ஏதேனும் ஒரு காரணத்தால் முழுப் பணத்தையும் இழந்து, வங்கி கணக்கில் பூஜ்ஜிய இருப்பு இருக்கலாம். இதற்கு மேல் நான் எங்கே கோடி கணக்கில் சேர்ப்பது? முதலீடு செய்வது எப்படி?  40 வயதிற்கு மேல் ஓய்வுக் காலத்துக்கு போதுமான நிதியை சேர்க்க வேண்டும் என்பவர்கள், சரியான திட்டமிடலை செய்தாலே போதும். போதிய நிதியை சேர்க்க முடியும். உண்மையில் யார் பணக்காரர்? இந்தத் திட்டமிடலுக்கு முன்பு சரியான சொத்து என்பது எது? என புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 60 வயதான மகேஷ் 3 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டுகள் வீடு வைத்துள்ளார். இதில் ஒரு வீட்டில் அவர் குடியிருக்கிறார். மற்றொரு வீட்டை மாதம் 30,000 ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளார். இதே சுரேஷ்  3 கோடி ரூபாயை ஃபைனான்சியல் அசெட் (ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள்) ஆக வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் அவருக்கு வருமானம் மட்டும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. இதனால் அவரிடத்தில் பணப்புழக்கம் என்பது அதிகம். சுரேஷ் பெரிய வீட்டில் ரூ.30,000-க்கு வாடகைக்கு இருக்கிறார். இவர்கள் இருவரில் யார் பணக்காரர் எனில் சுரேஷ் தான். ஏனெனில் அவரிடம் போதிய பணப்புழக்கம் என்பது உள்ளது. மகேஷிடம் வீடுகள் இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது மிகக் குறைவு தான். பொதுவாக தங்களிடம் இருக்கும் தொகையை பலரும் இழப்பதற்கு காரணம் பெரிய மருத்துவ செலவுகளாகத் தான் இருக்கும். இதனால் தான் மொத்த சேமிப்பு மற்றும் முதலீடுகளையும் இழந்திருக்கலாம்.  எந்தப் பெரிய மருத்துவ செலவு வந்தாலும்,  அதனை சமாளிக்க பலரும் யாராக இருக்கிறீர்களா? என்றால் நிச்சயம்  இல்லை என்று தான் கூற வேண்டும். ஆக முதலில்  ஒருவர் அவருக்கும்  குடும்பத்தினருக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீடு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு எடுக்க வேண்டும். இது எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் பெரிய மருத்துவ செலவுகளில் இருந்து அவரையும் குடும்பத்தினரையும் காப்பாற்றும்; கூடவே அவரின் சேமிப்பு, முதலீடு, சொத்துகளையும் காப்பாற்றும்; கடனில் சிக்குவதிலிருந்தும் காப்பாற்றும். அதேபோல ஒருவர் வாங்கும் சம்பளத்தை போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். அது  குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் இந்த உலகில் இல்லாவிட்டாலும், நிதி ரீதியாக குடும்பத்தினருக்கு பாதுகாப்பை கொடுக்கும்.  அதிக தொகைக்கு இந்த பாலிசியை எடுத்திருக்கும் போது, வருமானம் ஈட்டும் நபருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தினர் நிதி ரீதியாக எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். முதலீட்டில் கவனச் சிதறல்கள் வேண்டாம்..! பொதுவாக ஒருவரிடம் கையில்  அதிக பணம் இருக்கிறது; அதிகம் சம்பளம் வாங்குகிறார், அதிகம் சம்பாதிக்கிறார் என தெரிந்தால் சுற்றியுள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஒவ்வொருவரும் ஒரு ஐடியா கொடுப்பார்கள். . ஊட்டி, கொடைக்கானல், கோயம்புத்தூரில் வீடு வாங்கலாமா? சொந்த ஊரில் வீடு வாங்கலாமா? சொகுசு கார் வாங்கலாமா? இப்படி பல வகையிலும் கவனச்சிதறல் என்பது ஏற்படும். பிறர்  சொல்வது, நினைப்பது எல்லாம் சரியான முதலீடா? அதன் தேவை என்ன?, அதன் மூலமான வருமானம் எப்படி என முழுமையாக தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்யக் கூடாது. அதை சரியான முறையில் அலசி ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்வது என்பது சரியான திட்டமிடலாக இருக்கும். சரியான முதலீட்டு திட்டங்கள்..! பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது இந்த விஷயத்தில் தான். சம்பாதித்த பணத்தை யாரோ  இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் கூறினார் என கண்னை மூடிக் கொண்டு சேமிப்பு மற்றும் காப்பீடு கலந்த எண்டோமென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கி விடுவர்.  இதுபோன்ற பாரம்பரிய காப்பீட்டுத் திட்டங்களில் குறைவான காப்பீட்டு கவரேஜ் போக நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 5% வருமானம் மட்டுமே கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் பணவீக்கம் என்பதே 6 – 7% ஆக இருக்கிறது. ஆக பாலிசி மூலம் வெறும் 5% வருமானம் கிடைக்கிறது எனில், அதனால் பெரிய பயன் இல்லை. குறைந்தபட்சம் உங்கள் முதலீட்டின் மூலம்  ஆண்டுக்கு 12 சதவிகிதமாவது வருமானம் கிடைக்க வேண்டும்.  ஒரு சிலர் வருமானம் குறைவாக இருக்கும் திட்டங்களில் கண்ணை மூடிக் கொண்டு முதலீடு செய்கிறார்கள் எனில், மறுபுறம் பலரும் அதிக வருமானம் கிடைக்கும் என யாரோ கூறியதை கேட்டு கிரிப்டோகரன்சி, ஷேர் டிரேடிங், கமாடிட்டி டிரேடிங் போன்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அவை பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் போட்டப்  பணத்தை இழக்கிறார்கள். இன்னும் சிலர் ஆண்டுக்கு 30%,40%, 50% என அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பொன்சி திட்டங்களில் பணத்தை போட்டு மொத்தப் பணத்தையும் இழக்கிறார்கள். மேற்கண்ட திட்டங்களை தவிர்த்து, நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாகும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில், ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12–14% வருமானம்  கிடைக்கலாம். இந்தியாவின் அடுத்த பொருளாதார வளர்ச்சி  இன்னும் 15, 20 ஆண்டுகளுக்கு சிறப்பான  இருப்பதால், நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளாக தேர்வு செய்து முதலீடு செய்தால்  ஆண்டுக்கு 12- 14% வருமானம் என்பது சாத்தியம் தான். எஸ்.ஐ.பி மற்றும் ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி பொதுவாக முதலீடு செய்யும் முன்பு சரியான முறையில் கணக்கீடு செய்து, தேவைக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 40 வயதில் ஒருவரின் சம்பளம், வருமானம் என்பது நிச்சயம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது  மாதச் சம்பளம், வருமானம் ரூ.80,000, ரூ.1 லட்சம் என்பது போல் இருக்கும். அதனால், மாதம் 30,000 ரூபாய் முதலீடு என்பதை எளிதாக பலரும் செய்ய முடியும்.  இதை  அவரின் பணி ஓய்வு வயதான 60 வரை, அதாவது  20 ஆண்டுகளுக்கு தொடரும்பட்சத்தில்,  ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கும், நல்ல பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் போது, நிச்சயம் 2.99 கோடி ரூபாய் தொகுப்பு நிதியை அடைய முடியும். இந்த அளவுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய இயலவில்லை என்றால், மாதம் ரூ.25,000 அல்லது ரூ.20,000 முதலீடு செய்யும் போது தொகுப்பு நிதி முறையே ரூ.2.5 கோடி அல்லது ரூ. 2 கோடி ஆக இருக்கும்.    ஆரம்ப முதலீட்டுத் தொகையான ரூ.30,000-ஐ வருடத்திற்கு  10% அதிகரிக்கலாம். அப்படி  அதிகரித்தால் 60 வயதில்  கார்பஸ் என்பது 5.97 கோடி ரூபாயாக இருக்கும்.  இதுவே ஆரம்ப முதலீட்டுத் தொகை மாதம் ரூ.25,000 அல்லது ரூ.20,000  ஆக இருந்து, ஆண்டுக்கு 10% அதிகரித்து முதலீடு செய்யும் போது தொகுப்பு நிதி முறையே ரூ. 4.97 கோடி அல்லது ரூ.3.98 கோடி ஆக இருக்கும்.    ஆக 40 வயதில் உங்கள் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருந்தாலும் கூட, சரியான திட்டமிடல் இருந்தால் கோடிகளில் பணி ஓய்வுப் பெறுவது என்பது சாத்தியமானதே. இதற்கு சரியான நிதி திட்டமிடல் மற்றும் நிதி ஒழுக்கம்  இருந்தாலே எளிதில் அடைய முடியும். பாக்ஸ் தொகுப்பு நிதி நீண்டக் காலத்துக்கு வர..! தொகுப்பு நிதி மூலம் கிடைக்கும் தொகையை அந்த அந்த ஆண்டே முழுமையாக எடுத்து செலவு செய்யாமல் குறைவாக செலவு செய்தால், தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வருவதோ, அது உயர்ந்து கொண்டே வரும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதிக தொகையை எடுத்து செலவு செய்ய முடியும். ஒருவரின் ஓய்வுக் கால தொகுப்பு நிதி ரூ.2 கோடி இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை ஆண்டுக்கு 8 சதவிகிதம் வருமானம் தரும் திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு ரூ.16 லட்சம் கிடைக்கும். அதாவது மாதம் ரூ.1.33 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகையை அப்படியே செலவு செய்யாமல் மாதம் ரூ.70,000, ரூ.80,000 என்பது போல் செலவு செய்தால் தொகுப்பு நிதி பெருகி வரும். சுமார் ஐந்தாண்டுகள் கழித்து மாதம் ரூ.1 லட்சம், பத்தாண்டுகள் கழித்து ரூ.1.5 லட்சம் என்பது போல் எடுத்து செலவு செய்தாலும் தொகுப்பு நிதி குறையாது.   1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

பணி ஓய்வுக் காலம்: 40 வயதுக்கு பிறகு கோடிகள் சேர்ப்பது எப்படி? Read More »

Zero at 40… ₹3.6 Crore at 55! Is This Possible?

முதலீடு 40 வயதில் வெறும் ஜீரோ..! 55 வயதில் ரூ.3.6 கோடி.. எப்படி சாத்தியம்?!

எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/சம்பளம் வாங்கிய முதல் நாள் ராஜா போல செலவு செய்யும் நம்மால், மாத கடைசியில் அப்படி இருக்க முடிவதில்லை. சொல்லப்போனால் கடன் வாங்கி செலவு செய்யும் நிலையே பலர் மத்தியில் காணப்படுகிறது. மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தொகையை, எதற்கு எப்படி செலவு செய்தோம், எவ்வளவு சேமித்தோம், முதலீடு செய்தோம் என்றால் பலரின் பதில் ‘தெரியவில்லை’ என்பதாகத் தான் இருக்கும். ஒரு சிலர் கை நிறைய சம்பாதித்தாலும், சேமிப்புக்கு முக்கியத்துவம் எதுவும் கொடுப்பதில்லை.வரவு எட்டணா? செலவு பத்தணா? இன்றைய நிலையில் பலரின் நிலை வரவு எட்டணா? செலவு பத்தணா? என்பதாக இருக்கிறது.40 வயதான என் நண்பர் ஒருவர் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதாவது வருடத்திற்கு 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கையில் சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. மாத கடைசியில் அவரின் நிலைப்பாடு பூஜ்ஜியமாக தான் இருக்கிறது. அப்படி என்ன செலவு என பார்க்கையில், சென்னை இசிஆர் -ல் வாங்கிய சொகுசு வீட்டுக்கு மாத தவணை மட்டும் 1 லட்சம் ரூபாய் செலுத்துகிறார். வருடத்திற்கு அதற்கு மட்டும் 12 லட்சம் ரூபாய் செலுத்தி வருகிறார். அவர் பயன்படுத்தும் சொகுசு காருக்கு மாத தவணையாக ரூ. 60,000 அதாவது வருடத்திற்கு 7.2 லட்சம் ரூபாய் செலுத்துகிறார். குடும்பத்துடன் சர்வதேச சுற்றுலா செல்ல வருடத்திற்கு 4 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார். இது போக அவரின் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் செலவழிக்கிறார். குழந்தைகளின் கல்வி செலவாக வருடத்திற்கு 4 லட்சம் ரூபாய் செலுத்தி வருகிறார். அவரின் வருமான வரியாக சுமார் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறார். ஆக மொத்தத்தில் 48 லட்சம் ரூபாய் வருமானத்திற்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது. அவரின் நிதி நிலைப்பாட்டை எப்படி சரி செய்வது? சேமிப்பை எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம். படி-1: செலவை குறைத்து முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.! ஆடம்பரமான அபார்ட்மெண்ட், சொகுசு கார் என சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் வாழ்க்கை தரத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள முடியாது. உடனடியாக செலவுகளையும் குறைக்க முடியாது. ஆனால் மாதம் 25,000 ரூபாயை பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியும். அந்த வகையில் வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதை அவரால் சமாளிக்க முடியும். அது பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆக  அவர் குடும்பத்தோடு செல்லும் சர்வதேச சுற்றுலாவுக்கு செலவிடும் ரூ.4 லட்சம் தொகையில் குறைத்து எஸ்.ஐ.பி-ல் முதலீடு செய்ய  முடியும். அதை ஆண்டுதோறும் 10% அதிகரிக்கலாம். அப்படி செய்யும்பட்சத்தில் மேற்கண்ட எஸ்.ஐ.பி முதலீட்டை 15 ஆண்டுகள் தொடருகிறார் என வைத்துக் கொள்வோம். சராசரியாக 15% வருமானம் என கணக்கிட்டால் கூட, அவரின் தொகுப்பு நிதி 2.67 கோடி ரூபாயாக இருக்கும். பல ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20%-க்கு மேல் கூட வருமானம் கொடுத்து வருகிறது என்பதால் 15% வருமானம் என்பது சாத்தியமே எனலாம். ஆனால், அதற்கு பங்குச் சந்தையின் இறக்கம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சீராக இடை விடாமல் முதலீடு செய்து வருவது அவசியமாகும். படி -2: வீட்டு செலவு இவ்வளவா?மேற்கூறிய நண்பரின் வீட்டு செலவு மட்டும் மாதம் 75,000 ரூபாய், அதுவும் வீட்டு வாடகை என்பது இல்லாமல் எனும் போது, இது மிக அதிகம். இதை குறைக்க வீட்டு செலவுக்கு என தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் போட்டு வைக்கலாம். அத்தோடு குடும்பத்தினர் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளில் அவசர தேவைக்கு என ஒன்றை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, மற்றவைகளை நிரந்தரமாக முடித்துக் கொள்ளலாம். இது கூடுதலான அனாவசிய செலவுகளை தவிர்க்க உதவும். பயன்படுத்தும் ஒரே கார்டுக்கு வருடாந்திர கட்டணம் இல்லாமல், சலுகைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.வீட்டு கணக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து மாதம் 75,000 ரூபாய் செலவில், சுலபமாக வாரம், 3,500 ரூபாய்  மிச்சப்படுத்தலாம். இது மாதம் 14,000 ரூபாய் ஆகும். நம்மவர்களை பொறுத்த வரையில் உளவியல் ரீதியாக பார்க்கும் போது கையில் இருக்கும் காசுக்கு ஏற்ப செலவை செய்வோம். ஆக 75,000 ரூபாய் வீட்டு செலவு என்பதை, 61,000 ரூபாயாக சுருக்கிக் கொள்வதில் பிரச்னை இருக்காது. அதற்கேற்ப செலவுகளை திட்டமிட்டுக் கொள்ளலாம். மிச்சப்படுத்தும் 14,000 ரூபாயையும் ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் 15 வருடங்கள் போடுவதாக வைத்துக் கொள்வோம். இதற்கும் சராசரியாக 15% வருமானம் என கணக்கிட்டால் 15 ஆண்டுகள் கழித்து தொகுப்பு நிதியாக 93 லட்சம் ரூபாய் கிடைக்கும்.குரோர்பதி!!! படி 1 ல் ரூ.2.67 கோடி ரூபாய் தொகுப்பு நிதியும், அதனுடன் படி இரண்டில் 93 லட்சம் ரூபாய் என இரண்டையும் சேர்த்தால், மொத்த முதிர்வு தொகை 3.6 கோடி ரூபாயாகும்.  40 வயதில் பூஜ்ஜிய சேமிப்புடன் இருக்கும் நண்பர், அவரின் 55 வயதில் 3.6 கோடிக்கு அதிபதியாக முடியும். இதில் 60 லட்சம் ரூபாயை பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கீடு செய்தால் கூட, மீதம் 3 கோடி ரூபாய் இருக்கும். இன்றைய காலத்தில் நண்பரின் மாத செலவினம் 75,000 ரூபாய் என வைத்துக் கொண்டால், அவரின் 55 வயதில் 6% பணவீக்கத்தை கணக்கிட்டால், அவரின் செலவு 1.75 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்த 1.75 லட்சம் ரூபாய் என்பதை எளிதாக அவரிடம் இருக்கும் ரூ.3 கோடியை வைத்து பெற முடியும். உதாரணத்திற்கு சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் மூலம் (Inflation Adjusted SWP), ரூ.3 கோடி முதலீட்டின் மூலம் மாதம் ரூ.1.75 லட்சம் ரூபாய் பெற முடியும். 55 வயதில் ரூ.1.75 லட்சமாக இருக்கும் செலவு, 65 வயதில்  பணவீக்கம் காரணமாக  ரூ.2.95 லட்சமாக மாறலாம். இதையும் எஸ்.டபள்யூ.பி தொகையை ஆண்டுக்கு 10% உயர்த்துவதன் மூலம் சாத்தியமாக்கி கொள்ளலாம். 75 வயதில் எஸ்.டபள்யூ.பி மூலம் ரூ.5.29 லட்சம் என்பதையும் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும்.  ஒரு வேளை 85 வயது வரையில் இருக்கும்பட்சத்தில் முதலீடுகள் மூலம் மாதம் ரூ.9.48 லட்சம் வரையில் பெறலாம்.   ஆக 40 வயது வரையில் கூட சேமிக்காமல் இருந்தாலும், அதன் பிறகு சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால் கூட மிகப்பெரிய இலக்குகளை எளிதில் அடைய முடியும். குறிப்பாக உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் தேவைக்கும் (Want), அவசிய தேவைக்குமான (Need) வித்தியாசத்தை உணர்ந்து கொண்டாலே பிரச்னையை எளிதாக கையாள முடியும். செலவுகளை குறைத்து, முதலீட்டை அதிகரிக்க முடியும்.குறைந்த முதலீட்டிலும் கோடி..! இங்கே நாம் அதிக சம்பளம் வாங்கும் நண்பர் எப்படி செலவை குறைத்து கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதை பார்த்தோம். இதேபோல் குறைந்த வருமானம் கொண்டவர்களும் தேவையில்லாத செலவுகளை குறைத்து. ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவது மூலம் கோடீஸ்வரர் ஆக பணி ஓய்வு பெற முடியும். உதாரணத்துக்கு 40 வயதில் மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் வாங்கும் ஒருவர் மாதம் ரூ.15,000 எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டை அடுத்து வரும் ஆண்டுகளில் சம்பள உயர்வுக்கு ஏற்ப 3 சதவிகிதம் அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால் 48.37 லட்ச ரூபாய் முதலீடு என்பது ரூ. 2.39 கோடியாக அதிகரித்திருக்கும். இதுவே மாதம் ரூ. 10,000 முதலீட்டை ஆரம்பித்து ஆண்டுக்கு 3% அதிகரித்து வந்தால் 20 ஆண்டுகளில் ரூ. 1.56 கோடி சேர்க்க முடியும். எனவே, 40,45 வயதாகி விட்டதே பணம் எதுவும் சேமிக்கவில்லையை என கவலைப்படுவதை விட்டு விட்டு களத்தில் இறங்குங்கள்..! #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

முதலீடு 40 வயதில் வெறும் ஜீரோ..! 55 வயதில் ரூ.3.6 கோடி.. எப்படி சாத்தியம்?! Read More »

8 simple steps to achieve your goal of earning ₹1 crore with practical strategies for success.

ரூ. 1 கோடிஇலக்கு: இலக்கைஅடையஎளிய 8 படிகள்..!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ தொலைக்காட்சி வரலாற்றில் ‘கௌன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட்டான நிகழ்ச்சியாகும். நிறைய தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் வந்திருக்கிறது. ஆனால், இந்த ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆவதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் ஒரு பெரிய தொகையை வெற்றியாளருக்கு பரிசாக அளிப்பார்கள். 5 கோடி ரூபாய் வரைக்கும் பரிசளிப்பார்கள். ஒரு கோடி, இரண்டு கோடி என்பது எல்லோரின் கனவாக இருக்கும். ஆனால் எல்லோராலும் அந்த நிகழ்ச்சிக்கு சென்று ஒரு கோடி ரூபாய் வெல்வது சாத்தியமற்றது. யாராவது ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.ரூ. 1 கோடி இலக்கு…! வாழ்க்கையில், நீங்கள் ஒரு ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும் என்றால், கீழ்க்காணும் எட்டு படிகளை பின்பற்றினால் போதும். ஒரு கோடி ரூபாயை நிச்சயம் உங்களால் அடைய முடியும். படி 1:  முதலில் சேமிப்பு, பிறகு செலவுகள்..! நமக்கு சம்பளம் வரும்போது, செலவுகளை செய்கிறோம். 25,000 ரூபாய் சம்பளத்தில், 23,000 ரூபாய் செலவு செய்கிறோம்.. மீதி ரூ.2000. (வருமானம் – செலவுகள் = சேமிப்பு) – இதைத்தான் நாம் சேமிக்கிறோம். இப்படி செய்வது தவறாகும். இதற்கு பதில், வருமானம் – சேமிப்பு = செலவுகள் இப்படித்தான் நாம் தொடங்க வேண்டும். வருமானம் எப்படி முன்கூட்டியே நிலையானதாக இருக்கிறதோ, அப்படியை சேமிப்பையும், செலவுகளையும் நிலையானதாக முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.வழக்கமான, உங்களின் வருமானத்தில் 60 சதவிகிதம் வீட்டுச் செலவுகள் ஆகும். 20 சதவிகிதம் நீண்ட கால முதலீடு, 20 சதவிகிதம் குறுகிய கால சேமிப்பு. இப்படி ஒரு கணக்கு வைத்துக் கொள்ளலாம். இப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளீர்கள் என்றால், 80% வீட்டுச் செலவுகள் என்றும், 10 % நீண்ட கால சேமிப்புக்கும், 10% குறுகிய கால சேமிப்புக்கும் ஒதுக்கிவிடலாம். ஆனால், இப்படி ஏதோவொரு விகிதத்தை முன்கூட்டியே தீர்மானித்து விட வேண்டும். உதாரணமாக, ரமேஷ், மகேஷ் என்று இருவர் இருக்கிறார்கள்.  ரமேஷ் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறார். மகேஷ் 25,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த இருவரில் யார் பணக்காரர் என்று கேட்டால், எல்லோரும் 50000 சம்பாதிக்கும் ரமேஷ் தான் பணக்காரர் என்று சொல்வோம்.  ஆனால், ரமேஷ் 50,000 ரூபாய் சம்பாதித்தாலும், 10% அதாவது 5000 ரூபாய்தான் முதலீடு செய்கிறார். மகேஷ் 25,000 ரூபாய் சம்பாதித்தாலும், 20% அதாவது 5,000 ரூபாய் முதலீடு செய்கிறார். இந்த இருவரில் யார் பணக்காரர் என்றார் 20 % சேமிக்கும் மகேஷ் தான் பணக்காரர். ஆகையால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், சம்பளம் வரப்போகிறது என்றால், சேமிப்புக்கு எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம் என்பதை முதலிலேயே தீர்மானித்துவிடுங்கள். அதை  நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் வர வேண்டும் என்பதாக முதலீடு செய்ய வேண்டும். படி 2: வாழ்க்கையும் வாழ்க்கை முறையும்..! உங்களின் வாழ்க்கையை (Life) மேம்படுத்துங்கள். உங்களின்  வாழ்க்கைமுறையை (Lifestyle) லைஃப்ஸ்டைலை மேம்படுத்தாதீர்கள். நாம் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறு நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து வாழ்வதாகும். என் நண்பன் அந்த பிராண்டடு விலை உயர்ந்த போனை வாங்கிவிட்டான். என் நண்பன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி விட்டான். இதுபோல நிறைய ஒப்பீடு செய்து பார்த்தல் கூடாது. பதவி, அதிகாரம், பணம், லைஃப்ஸ்டைல் போன்ற எல்லாவற்றிலும் ஒரு போட்டி மனப்பான்மை நமக்குள் வந்துவிட்டது. மற்றவர்களுடன் ஒப்பிட்டே நம்முடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம். நீங்கள் கல்லூரியில் படித்து முடிக்கும் வரைதான் எல்லோருக்கும் ஒரே கேள்வித்தாள். அங்கு, அடுத்தவர் விடைத்தாளை பார்த்து எழுதினாலும் உங்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் எல்லோருக்கும் வெவ்வேறான கேள்வித்தாள் தான். ஆகையால், மற்றவர்களை பார்த்து நீங்கள் பின் தொடர வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை யோசிப்பதுதான் படி 2. படி 3: அவசர செலவுகளை சமாளிக்க தயாராக இருப்பது கோவிட் 19  வந்து போனது. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு. இதுபோல நிறைய எதிர்பாராத இழப்புகள் வருவதற்கு  வாய்ப்பு இருக்கும். இதுபோல எதிர்பாராத செலவுகள் வரும்போது, கடனை பலரும் வாங்கித்தான் செலவு செய்கிறோம். குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதத்துக்கான செலவு தொகையையாவது  ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில், எமெர்ஜென்சி ஃபண்டாக வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமாகும். இதுதான் தனிநபர் நிதியின் (personal finance) அடிப்படையாகும். படி 4 மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு..! வாழ்க்கையில் காப்பீடு எடுப்பது மிக முக்கியமானதாகும்.நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்தக் கம்பெனி ஒரு மருத்துவக் காப்பீடு  அதிக கவரேஜ் தொகைக்கு கொடுக்கிறது என்றால், நீங்கள் தனியாக பாலிசி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் பிரச்னைகள் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். விபத்துகள் நடக்கலாம். இதுபோல நடக்கும்போது 75% பேர் கையில் இருந்துதான் பணத்தை செலவு செய்கிறார்கள். அதுவும் கடன் வாங்கிதான் செய்கிறார்கள். இதனை தவிர்க்க மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகும். ஒருவர் குடும்பத்தை வழி நடத்துபவராக இருந்தால், வாழும் போது குடும்பத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விடுவார்கள். துரதிஷ்டவசமாக வருமானம் ஈட்டும் நபர் இல்லாமல் போகும் சூழ்நிலை வருகிறது. இப்போது, குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தேவைகள் சமரசமாகி விடக்கூடாது. அதற்கு, குறைவான பிரீமியத்தில் அதிக கவரெஜ் வழங்கும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால், குடும்பத்தினரின் நிதித் தேவைகள் நிச்சயமாக பூர்த்தியாகும் எனலாம். படி 5: தெளிவான செலவு திட்டம் தேவை.! இது மிக முக்கியமானதாகும். 50% பிரச்னைகள் எப்படி தீரும் என்றால், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் தெளிவாக தெரிந்துகொண்டால் மிகப்பெரிய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும். நீண்ட  கால முதலீட்டில் (long term) என்ன வேண்டும், குறுகிய கால (short term) முதலீட்டில் என்ன வேண்டும் என்பதை தெளிவாக பிரித்துக் கொள்ளுங்கள். குறுகிய கால முதலீடு என்பது மூன்று வருடங்களுக்குள்ளாக, மொபைல் போன், கார், சுற்றுலா போன்றவையாகும். இதற்கு வருடத்தின் செலவுகளில் 5%, 7% 10% இப்படி ஒரு தொகையை தீர்மானித்துவிட்டால், முடிவு எடுப்பது மிகவும் எளிதாகிவிடும். நம் குடும்பத்தினரிடம் சொல்லிவிடலாம். இவ்வளவுதான். இந்த தொகைக்குள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள் என்று சொல்லிவிடலாம். நீங்கள் இப்படி ஒரு தொகையை தீர்மானிக்கவில்லை என்றால், உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. தேவையில்லாமல் அதிக பணம் செலவாகக் கூடும். . அதேபோல, நீண்ட கால திட்டங்கள், ஓய்வுகால திட்டங்களில், நான் ஓய்வு பெறும்போது சொந்த வீட்டில்தான் இருப்பேன். நான் 2040-ம் வருடத்தில் ஓய்வு பெறுவேன். அப்போது முதலீடுகள் மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் வரும். இப்படி ஒரு தெளிவு திட்டம் இருந்தது என்றால், இன்றைக்கு நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்பது தெளிவாகும். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் இன்ஜினீயரிங் படிப்பதற்கு நானே அவனுக்கு செலவு செய்வேன். ஆனால், அவன் வெளிநாட்டில் படிக்கிறேன் என்றால், கண்டிப்பாக நான் செலவு செய்ய மாட்டேன். ஸ்காலர்ஷிப் அல்லது கல்விக் கடன் வாங்கி தான் படிக்க வைப்பேன். இந்த மாதிரி முடிவை தெளிவாக எடுத்து, அவனிடமும் சொல்லிவிட்டால், அவனும் ஒரு மாற்று வழியை யோசித்து வைத்திருப்பான். ஆகையால், நீண்ட கால முதலீட்டுக்கு, எது எனக்கு வேண்டும், எதை என்னால் பண்ண முடியும், எது எனக்கு கூடுதல் செலவு என்பதை தெளிவாக நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்களானால் மிகவும் நல்லது. படி 6: நமக்காக மற்றவர்களை முதலீடு செய்ய வைக்கலாம்.இந்தியாவில் இருக்கும் சிறந்த மனிதர்களை உங்களுக்காக வேலை செய்ய வைக்கலாம். அம்பானி, அதானி போன்ற நிறைய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி உங்களுக்கு வேலை செய்வார்கள்? இதற்கு பெயர்தான்`பங்கு முதலீடு (stock investing). உங்களுடைய சேமிப்பை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் போது, பணவீக்கதை விட இரண்டு மடங்கு வருமானம் வருவதற்கு  அதிக பெரிய வாய்ப்பு இருக்கிறது. பணவீக்கம் 6-7 % என்றால் 12-14 % உங்களுக்கு வருமானம் வரும். ஆகையால், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய தொடங்குங்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு  சிறந்ததாகும். படி 7: எதை செய்யக் கூடாது என்பதில் தெளிவு…! பணத்தை கொண்டு வருமானம் ஈட்ட எதைச் செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.  திரிலான தினசரி பங்கு வர்த்தகம், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் போன்றவற்றால் பலரும் பணத்தை அதிகமாக இழக்கிறார்கள்.  பேராசை மற்றும் பயம் இந்த இரண்டும் வந்துவிட்டால், நம்முடைய பொது அறிவை இழக்கிறார்கள். எஃப்&ஓ-வில் முதலீடு செய்து, ஒரு பெரிய தொகையை சேர்த்து விட்டேன் என்று சொல்லும் யாரையாவது, தனிப்பட்ட முறையில்  தெரியுமா உங்களுக்கு?அப்படிப்பட்டவர்களை கண்ணில் பார்த்துள்ளீர்களா? யாரோ ஒருவர் டெலிகிராம் சேனலில், வாட்ஸ் அப் சேனலில் விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று, அதற்கு பின்னால் சென்று முதலீடு செய்து, மொத்த பணத்தையும் இழந்தவர்களை, பலப்பல பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆகையால், எதைச் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். படி 8: செயலில் இறங்குங்கள்..! எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், அதற்கான முயற்சியை நான் எடுக்க மாட்டேன், செயல்படுத்த மாட்டேன் என்றால், நீங்கள்தான் ஒரு பெரிய முட்டாள். ஏனென்றால், அறிவாளி, திறமையானவர் என்றால், நிறைய ஐடியாக்கள் இருந்தாலும், அதை செயல்படுத்தினால்தானே உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.  செயல்படுத்தாமல், அடுத்த மாதம் செய்யலாம்; ஆறு மாதம் கழித்து செய்யலாம் அல்லது சம்பளம் உயரும் போது செய்யலாம் என்று தள்ளிப்போட்டால் அது தவறு. 25 வயதில் வேலைக்கு சேரும் ஒருவர் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 35 ஆண்டுகளுக்கு அவரின் 60 வயது வரைக்கும் முதலீடு செய்து வந்தால், முதலீட்டுக்கு ஆண்டுக்கு 13% வருமானம் கிடைத்தால் ரூ.1 கோடிக்கு மேல் சேர்ந்துவிடும்.சீக்கிரமாக ஆரம்பித்து முதலீடு செய்ய ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானதாகும். அவசரக் கால நிதியை உருவாக்குங்கள், காப்பீடுகளை எடுங்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொண்டு செயலில் இறங்குகள்.  இந்த எட்டு படிளை  பின்பற்றுங்கள். நீங்கள் கண்டிப்பாக கோடீஸ்வரராக சீக்கிரமே ஆகலாம். Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

ரூ. 1 கோடிஇலக்கு: இலக்கைஅடையஎளிய 8 படிகள்..! Read More »

7 critical mistakes to avoid for boosting your wealth value, paired with expert tips for financial growth.

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின் மதிப்பு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ ஒரு சரியான நிதி திட்டமிடலை உருவாக்குவது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு  அந்த நாம் செய்யும் சில தவறுகளையும் மாற்றிக் கொள்வதாகும்.  அது மிகப் பெரிய நிதி இலக்குகளை (Finance Goals) கூட எளிதில் அடைய உதவிகரமாக இருக்கும். தவறுகளை திருந்தி கொள்வது உங்கள் செல்வத்தின் (Wealth) மதிப்பை அதிகரிக்க மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். பெரும்பாலான மக்கள் இன்றைய காலகட்டத்தில் தங்கள் நிதியை சரியாக நிர்வகிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களை அறியாமலேயே சில தவறுகள் செய்கின்றனர். இது அவர்களையும் அறியாமல் அவர்களின்  செல்வத்தின்  மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தவறுகளை சரி செய்து கொண்டாலே, பணத்தை சரியாக  நிர்வகிக்க முடியும்.  பொதுவாக, பலரும் செய்யும்  ஏழு  முக்கிய தவறுகள் பற்றி பார்ப்போம். 1 சமூக அஸ்தஸ்துக்காக அதிக செலவு..! இன்றைய கால கட்டத்தில் பலரும் செய்யும் தவறுகளில் முக்கியமான ஒன்று, சமூகத்தில் தங்கள் அஸ்தஸ்து உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதாகும்.  தாங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் தொடங்கி, கார் வரையில் மிக விலை உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்; மற்றவர்கள் மதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களின் நிதி தகுதிக்கு மீறி அதிக செலவு செய்கிறார்கள். இதை தவிர்த்து தங்கள் தேவை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப  வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். யாரோ  நண்பர், உறவினர்கள் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அதிக விலை கொடுத்து நாமும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது பலரும் செய்யும் மிக முக்கியமான தவறுகளில் ஒன்று. 2 வெளி உணவுகளை தவிர்த்தல்..! இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே மிக வேகமாக பரவி வரும் ஒரு மோசமான பழக்க வழக்கங்களில் ஒன்று,பெரும்பாலும் வெளி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாகும்.சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வரும் வித விதமான உணவகங்களே  இதற்கு சாட்சி. கடையில் சாப்பிடுவது என்பது மக்களின்  அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி விட்டது எனலாம். இன்றைய நடுத்தர குடும்பங்கள் தொடங்கி,பணக்கார குடும்பங்களில் வரையில் தவிர்க்க வேண்டிய இந்த வழக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது குடும்ப செலவில் பணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்கும். உடல் நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளியில் ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதை குறைந்துக் கொண்டாலே நம்மால் மிகப் பெரிய தொகையை மிச்சப்படுத்தி, முதலீடு செய்து செல்வம் சேர்க்க முடியும். 3 பிராண்டடு பொருள்களுக்காக அதிகமாக செலவிடுதல்..! நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆடைகள், ஷீக்கள், பெல்ட்கள், நாம் முடிவெட்டும் சலூன்கள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை பிராண்டு ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். போதிய பண வசதி இல்லை என்றாலும் ஐபோன், ஆப்பிள் லேப்டாப் என பெரிய பிராண்டடு பொருள்களை தகுதிக்கு மீறிய அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் நம்மவர்கள் இடையே வந்திருக்கிறது. இப்படி செய்வதால் முதலீட்டுக்கான தொகை குறைந்து செல்வம் சேர்வது, நிதி இலக்குகள் நிறைவேறுவது தடைபடுகிறது. 4 சுற்றுலாவுக்காக அதிக செலவு..! சமீப காலமாக மக்களிடையே பரவி வரும் மற்றொரு விஷயம், சுற்றுலா செல்வதற்காக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில், தபால் அலுவலகம் மற்றும் வங்கி ஆர்.டிகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குழந்தையின்  உயர் கல்வி, மருத்துவ செலவு,  கார், சொந்த வீடு  போன்றவற்றுக்காக தனித் தனியாக எஸ்.ஐ.பி  முறையில் முதலீடு செய்து வருபவர்கள், தற்போதைய காலக் கட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காக குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி  முறையில் தங்கள் வருமானத்தில் சிறு தொகையை முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக 25 – 35 வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினர், கண்டிப்பாக  சர்வதே சுற்றுலா அல்லது வேறு எங்கேனும் செல்ல வேண்டும் என அதிக செலவு செய்கின்றனர். இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான் என்றாலும் கூட, சுற்றுலாவுக்காக அதிக அளவு செலவு செய்வது என்பது தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று. சுற்றுலாவுக்காக ஆண்டு தோறும் அதிக தொகையை செலவு செய்து வந்தால், முதலீட்டுக்கு பணம் மிச்சமாகாது. சம்பளத்தில் சுமார் 3-5 சதவிகித தொகையைதான் சுற்றுலாவுக்காக செலவிட வேண்டும்.   5 பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி இன்றைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அங்கு தான் தரமான கல்வி கிடைக்கிறது. அங்கு படித்தால்தான்  குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார்கள்.  பொதுவாக சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒருவர் படிக்க ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாயாவது கட்டணம் என்பது இருக்கும். ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் 3 லட்சம் ரூபாய் செலவாகும். இது நடுத்தர குடும்பத்திற்கு மிகப் பெரிய செலவு ஆகும். வருடத்திற்கு 45 – 50 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள்  எனில், இதில் 3 லட்சம் ரூபாயை பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுவது என்பது பெரிய பிரச்னையாக இருக்காது. இதுவே 10-12 லட்சம் ரூபாய் மட்டுமே வருடத்திற்கு சம்பாதிக்கும்  நடுத்தர குடும்பத்திற்கு, இது மிகப் பெரிய செலவு ஆகும். குறைந்த கட்டணத்தில் சிறப்பான கல்வியை கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் ஏராளம் உண்டு.  அவற்றை தேர்வு செய்து, அங்கு  குழந்தைகளை படிக்க வைக்கலாம். ஒரு வேளை ஒரு சில வருடங்கள் கழித்து உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது அப்போது பெரிய பள்ளிக் கூடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் வருமானம் குறைவாக இருக்கும் போது, ஆரம்பத்தில் இருந்தே சி.பி.எஸ்.இ பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். குழந்தைகளின் கல்வி செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 6 திருமணத்திற்கு அதிக செலவிடுதல் ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒன்று. இதனால் பலரும் தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதிலும் திருமணம் என்றாலே பிரைடல் மேக்கப் என்கிற மணமகள் அலங்காரம் என்பது மிகப் பெரிய டிரெண்டாகி வருகிறது. இதற்கு மட்டும் சில லட்சங்கள் செலவு செய்யும் குடும்பங்கள் ஏராளம். இதேபோல், வீடியோ, புகைப்படம் என லட்சக்கணக்கில் செய்யும் குடும்பங்கள் மிக அதிகம்.    சிறுக சிறுக சேமித்து வைத்த பெரும்பாலான சேமிப்புகளை இப்படிபட்ட ஆடம்பர செலவுகளிலேயே பலரும் பணத்தை கரைத்து விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் அதையும் தாண்டி கடன் வாங்கிச் செலவு செய்கின்றனர். கடன் வாங்கி திருமணச் செலவுகளை மேற்கொள்வதை தவிர்க்கலாம். மாறாக இதுபோன்ற அனாவசிய செலவுகளை தவிர்த்து, அதை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கலாம்.  7  கிரெடிட் கார்டு பயன்பாடு இன்றும் பலர் அடுத்த மாத சம்பளத்தில் தான் தற்போதைய மாத செலவுகளை செய்து கொண்டிருப்பர். சிலருக்கு மாத கடைசியில் கை கொடுப்பது கிரெடிட் கார்டுகள் தான். இன்னும் சிலர்  ஓட்டல், கிளப், சினிமா, சுற்றுலா என ஜாலியாக கிரெடிட் கார்டு மூலம் இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள்.  அடுத்த மாதம் சம்பளத்தில் அதை கட்டிக் கொள்ளலாம் என கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.   இது மிக மோசமான ஒரு பழக்கம். நமது தாத்தா, பாட்டி அல்லது அம்மாவிடம் ஏதேனும் அவசர தேவைக்காக பணம் கேட்டால், தாங்கள் சேமித்து வைத்த தொகையை பல இடங்களில் இருந்து எடுத்து வந்து தருவர்.  ஆனால், இன்றைய சூழல் அப்படி இல்லை. மாறாக கடன் வாங்கியும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலவு செய்கிறோம். ஆக இதுபோன்ற மோசமான பழக்கங்களை தவிர்த்தாலே நம்மிடம் பெரிய தொகை என்பது மிச்சமாகும். அதனை முதலீடு செய்யும் போது செல்வம் சேரும்.   பார்ட்டிகள் பலரும் செய்யும் தவறுகளில் ஒன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட சில தினங்களுக்கு அதிக செலவு செய்வதாகும்.  குழந்தையின்முதல் பிறந்த நாள். 10-வது திருமண நாள் என நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் பெரிய ஓட்டல் அல்லது பொழுதுபோக்கு விடுதிகளுக்கு கூட்டிச் சென்று லட்சக்கணக்கான ரூபாயை கண் மூடித்தனமாக செலவு செய்கிறார்கள். இது மிக மோசமான தவறுகளில் ஒன்று. குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக  1 வயதில் 1 லட்சம் ரூபாய் செலவு செய்வதற்கு பதில், அதே தொகையில் நகையாக, தங்க நாணயமாக வாங்கி வைக்கலாம்; நல்ல நிறுவனப் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.   இதன் மதிப்பு என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும். மேலே கூறப்பட்ட தவறுகளை தவிர்த்தாலே முதலீடு செய்ய அதிக தொகை கிடைக்கும். அது செல்வத்தை உருவாக்கவும் பெருக்கவும் செய்யும்.  Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின் மதிப்பு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்! Read More »

Is this Market Fall a Real Crisis?

Weekly Wealth Report Issue 179, Weekly Wealth Newsletter:  27th Jan 2025 -3rd Feb 2025 (Weekly Wealth Newsletter and a Private Circulation from Creating Wealth Company)                                                                                Curated by Mr. Sathish Kumar Founder – Creating Wealth Company Crorepathi Creator | Financial Consultant | Author | Speaker | Columnist | Youtuber Phone – 9841058689   Mail – creatingwealthadvisory@gmail.com     Web – www.sathishspeaks.com Is this Fall a Real Crisis? Download this NewsLetter as a PDF DOWNLOAD AS PDF You might feel that we are in the mid of devastating market Crash. The Indian stock markets have indeed declined over recent months, but by historical standards, this correction has been rather modest. The Sensex remains up 8.8 per cent over the past year, and looking at the five-year horizon. Yet the outcry on social media platforms would have you believe we’re facing a second global financial crisis. the mechanics of social media actively encourage and amplify negative sentiment. What should investors do in this environment? The answer is remarkably simple, though not necessarily easy to execute: maintain your regular investment schedule, focus on fundamentals and stay invested for long term. The current situation offers a valuable lesson in maintaining perspective for the fundamentally driven long-term equity investor. The most successful investors I’ve observed over the years share one crucial trait: they treat market corrections not as disasters but as natural features of the investment landscape. Just as the monsoon comes every year, markets will have their periods of decline. The key is to prepare for these periods not by trying to time them This means you can allocate additional funds to Mutual funds for long term Investing with diversifying appropriately. Most importantly, investing only those funds that won’t be needed for several years (At least 5 year). Happy Investing! Successful investment strategy requires regular reviewing and investor should buy funds at lower levels you can always reach us @ 78100 79946 for your portfolio review and rebalance Weekly Market Pulse Domestic equity markets fell for the third consecutive week as key benchmark indices BSE Sensex and Nifty 50 fell 0.56% and 0.48%, respectively. The fall was broad-based as the midcap segment and the small-cap segment both closed the week in red. Domestic equity markets fell amid a broad-based sell-off across the sectors on concerns over weak corporate earnings in Q3 FY25 and continued foreign fund outflows. Losses were extended following a mixed set of signals from the new U.S. President, as he delayed tariff plans on Chinese goods but threatened to impose tariffs on Canada and Mexico. On the BSE sectoral front, BSE Realty plunged 9.19% following a slowdown in housing sales BSE IT rose 2.32% supported by strong Q3 FY25 results by the large domestic information technology companies Mutual Fund Corner Invesco India Equity Savings Fund Growth potential of equities. The net long equity exposure may help reap benefit of long term growth potential of equity Arbitrage opportunity. Each arbitrage position in equity has a corresponding exposure in stock future which helps in reducing risk. Fixed Income exposure. The exposure to fixed income aims to reduce volatility and generates stable income. Bottom up and top down approach, combining growth and value buys to generate consistent outcome through all market conditions Taxation treatment Maintains eligibility for equity taxation. Equity exposure to be maintained in the range of 65-80% 20-35% allocation in debt and money market instruments To invest in SIP & in Mutual Funds Click the link and start your investments instantly ( You can also call us @ 78100 79946 ) Start your Investment Stock of the Week BSE CMP – 5556 Target – 6499 ( In 12 – 18 Month’s Time Frame) Bombay Stock Exchange (BSE Ltd) is an Indian Stock Exchange located at Dalal Street in Mumbai. The Co. facilitates a market for trading in equity, currencies, debt instruments, derivatives, and mutual funds. Strong Long Term Fundamental Strength with a 19.27% CAGR growth in Operating Profits With a growth in Net Profit of 223.27%, the company declared Outstanding results in Sep 24 High Institutional Holdings at 32.03% The company has declared positive results for the last 7 consecutive quarters Nil debt company OPERATING CF(Y) Highest at Rs 2,842.03 Cr NET SALES(Q) Highest at Rs 813.30 Cr PBDIT(Q) Highest at Rs 455.79 cr. For your Equity Recommendation, Pls call us 78100 79946 Mutual Fund Course All you want to learn about Mutual Funds Kickstart your Investment Journey of 2025 from here What You will Learn: 1. A-Z of Mutual Funds 2. Master the Art of SIP’s 3. Build Wealth Like a Pro 4. Recorded session contains 8 Chapters in Tamil Language 5. Lifetime Access Join Mutual Fund Course My First 1 Crore Club Still Wondering how a salaried person/professionals can make 1cr? Why do you have to join this Community? • Having money but still doesn’t know how & where to invest? • Selecting wrong Stocks? • Selecting wrong mutual funds? • Invested in all possible ways still money haven’t doubled? Join our First 1cr Club Webinar by payingjust 499/- Join the ONE CRORE Club Stock Simplified Course All you want to learn about Stock Market Kickstart your Investment Journey of 2025 from here Key Highlights: 1. Key entry and exit points of the stock market 2. 6-point filter to select a high-performing stock 3. Learn macro-economic trends in stock picking Join the Stock Market Simplified Course This Week Media Publications My Recent Article in Nanayam Vikatan – Will Copy and Paste Investing produce better returns for Investors? Click Here My Book Publications Middle Class to Million Dollar Book Buy Now To Buy my Untold Wealth Secret Book Buy Now Top 10 Mutual Funds to Invest in 2025 Buy Now Download this NewsLetter as a PDF by clicking the below button DOWNLOAD NOW Facebook Youtube

Is this Market Fall a Real Crisis? Read More »

Transform your mindset and unlock your potential for success!

கோடிகளில் பணம் சம்பாதிக்க 6 முக்கிய  மனநிலைகள்..  உங்களிடம் இருக்கா?

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கும். அது ஏழையாக இருந்தாலும் சரி,கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பணத்திற்காகத் தான் வேலை செய்கிறோம். எனினும்பணக்காரர்கள் பணத்தின் பின்னால் ஓடுவதில்லை. ஆனால் அவர்கள் அதை முன்கூட்டியே திட்டமிட்டுஅதை அடைய வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகின்றனர். அவர்கள் விரும்பியதை அடைய சுதந்திரமாக செயல்படுகின்றனர். அந்த மனநிலையை வளர்த்துக் கொள்வதால் தான், அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். ஆக நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும், கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில்,   ஆறு குறிப்பிடத்தக்க தகுதிகளை உங்களுக்குள் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மன நிலை சிறப்பானதாக இருந்தால், அதுவே உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். அப்படி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 1 வெற்றிதான் முதல் இலக்கு நாம் எதை எடுத்துக்கொண்டாலும் வெற்றி என்பது இரு முறை நிகழும். முதல் வெற்றி மனதளவில் நடக்கும், இரண்டாவது வெற்றி நடைமுறையில் நடக்கும்.   பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு தொழிலை செய்வதில்லை. மாறாக அதில் சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான்  செயல்படுகிறார்கள். உதாரணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டும், விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ வேண்டும் என நினைத்தால்,இந்தியாவின் சிறந்த தொழிலதிபர் ஆன முகேஷ் அம்பானி ஆயுள் முழுக்க அவர் சம்பாதித்த சொத்துகளைசெலவு செய்தால் கூட, அவரால் அவரின் சொத்துகளை செலவழிக்க முடியாது. ஆனாலும் கூட இன்று வரையில்புதிய புதிய வணிகங்களை தொடங்குகிறார். முதலீடு செய்கிறார் எனில், ஏன்? ஏனெனில் அவர்வெற்றி என்ற இலக்கை அடைய துடிக்கிறார். அந்த மனநிலையில் தான் இருக்கிறார். அதுவே அவரின் பணம் மேலும் வளர உதவிகரமாக இருக்கிறது. ஆக இந்த வெற்றி மனநிலையை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பணத்தின் பின்னால் ஓடாமல், வெற்றியை நோக்கி பயணிக்கும் போது அதுவே நம் இலக்கை அடைய உதவிகரமாக இருக்கும்.  2  பிறரை கவர பந்தா வேண்டாம் இரண்டாவது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் நிகர சொத்து மதிப்பு என்கிற  நெட்வொர்த் ஆகும்.  ஒரு பணக்காரருக்கும் (Rich Man), செல்வந்தருக்கும் (Wealthy man) இடையில் உள்ள விஷயங்களை கவனித்து பாருங்கள், ஒரு பணக்காரர் மிக ஆடம்பரமாக கையில் தங்க கடிகாரம், தங்க ஆபரணம், விலை உயர்ந்த சொகுசு பென்ஸ் கார் என வைத்திருப்பார். ஆனால் அதை சரியாக பராமரிப்பதற்கு செலவிட வேண்டிய தொகை என்பது, எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். ஏனெனில் பென்ஸ் காரின் இன்ஷூரன்ஸ், மற்ற பராமரிப்பு செலவுகள் என்பது மிக அதிகம். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் மொத்த சொத்தின் மதிப்பை கணக்கிட்டால், செல்வந்தரை காட்டிலும் குறைவாகவே இருக்கும். ஆனாலும் சமுதாயத்தில் தங்களை முன்னிலைப் படுத்தி கொள்ள இத்தனையும் செய்வார்கள். இன்னும் இதை தெளிவாக நடைமுறை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பந்தா பேர்வழிகளாக இருப்பர். ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு வீழ்ச்சியை சந்திக்கிறார்கள் என்றால் அவ்வளவு தான். அதோடுஅவர்களின் சொத்து மதிப்பு தரைமட்டத்திற்கு சென்றுவிடும். அதிலிருந்து அவர்களால் மீள முடியாது. இதே ஒரு செல்வந்தரை பார்த்தால் மிக எளிமையாக இருப்பார். அவரும் பென்ஸ் கார் வைத்திருப்பார். ஆனாலும் அவர் அதை பராமரிப்பது எளிது. அவரின் வணிக தேவைக்காக அதை வாங்கியிருப்பார்.அவரின் சொத்து மதிப்பும் பணக்காரர்களை காட்டிலும் அதிகம் இருக்கும். அவர்கள் ஆடம்பரத்தை விடுத்து, தங்கள் நெட்வொர்த்தை எப்படி அதிகப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவார்கள். ஆக இதெல்லாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.  3. பணம் இருப்பதை வெளியில் காட்டாதீர்கள்..! பணம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள். பொதுவாக, நடுத்தர  மக்கள் பலரும் தங்களை எப்போதும் பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக்கொள்ள நினைப்பார்கள். அதற்காக பணக்காரர்கள் பயன்படுத்துவதை போல் விலை உயர்ந்த கார்,  ஸ்மார்ட் போன் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி குவிப்பர்.  தங்களிடமும் பணம் இருக்கிறது என்பதை இதன் மூலம் காட்டிக் கொள்வர். பணக்காரர்கள் போல ஆடம்பரமாக வாழ நினைப்பார்கள். அதற்காக கடன் வாங்கி விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பது இன்னொரு துரதிர்ஷ்டவசமான விஷயம்.  இது மிகப்பெரிய தவறு ஆகும். அதை  ஒருபோதும் நீங்கள்  செய்யாதீர்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.  ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துள்ளீர்களா? வங்கியில் பணம் வைத்திருக்கிறீர்களா? மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறீர்களா? விலை உயர்ந்த கார் வாங்கியிருக்கிறீர்களா?    அதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்.  ஆனால் மற்றவர்கள் இடத்தில் பகிராதீர்கள். அதை விடுத்து பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக் கொள்ள எதையும் செய்யாதீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ பழங்குங்கள். அதை விடுத்து கடனை வாங்கி செலவு செய்து அஸ்தஸ்தை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், அது உங்களை மேலும் சரிவுக்கே கொண்டு செல்லும். இது உங்களை எப்போதும் வளர விடாது. ஆக இந்த மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். 4 நீண்ட கால அடிப்படையில் யோசித்தல்..! பலரும் நினைப்பது குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும். உதாரணத்திற்கு மிக குறைந்த விலையில் இருக்கும் பென்னி பங்குகளை வாங்கிக் கொண்டு, அது ஒரே வருடத்தில் பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்க வேண்டும்எ ன்று நினைக்கிறார்கள். 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்துவிட்டு, 10% வருமானம் கிடைத்து, 11 லட்சம் ரூபாயாக எதிர்பார்த்தால் தவறில்லை. ஆனால் 10 லட்சம் ரூபாய் 10 கோடி ரூபாயாக அதிகரிக்கும்? என்று எதிர்பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு. 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு 15% வருமானம் கிடைக்கிறது எனில், 50 வருடத்தில் உங்கள் முதலீடு 100 கோடி ரூபாய் என்ற இலக்கை அடைந்திருக்கும். ஆனால் இப்படி யாரேனும் நீண்டகால அடிப்படையில் யோசிக்கிறோமா? என்றால் நிச்சயம் இல்லை. ஆக நீண்ட கால அடிப்படையில் உங்கள் இலக்குகளை உயர்ந்ததாக வைத்திருங்கள். அது உங்கள் பணம் வளர உதவிகரமாக இருக்கும். 40 வயதான ஒருவர் இப்போது 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, 50 வருடம் காத்திருந்தால், 90 வயதில் 100 கோடி ரூபாய் கிடைத்து என்ன பலன் என்ற கேள்வியும் எழலாம்.   ஆக இந்த வயதில் உங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். 50 ஆண்டுகள் என்பதை விடுத்து, 10, 15 ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள். ஆக நீண்ட கால அடிப்படையில் திட்டமிடல் என்பது மிக மிக அவசியமான ஒன்று. 5  ரிஸ்கை கணக்கிடுதல் பலரும் பங்குச் சந்தை என்றால் அது சூதாட்டம். மியூச்சுவல் ஃபண்ட் என்றால் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் முதலீடு ஆகும். அவற்றை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என பலரும் விலகியே இருக்கிறார்கள். என்னால் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது என கூறுவர். ஆனால் இது  மிக தவறானது. மாறாக வணிகமோ அல்லது முதலீடோ அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு  அதில் ஈடுபடலாம்.. இது வெற்றி பாதைக்கு கூட்டி செல்லும்.அதை விடுத்து எந்த முயற்சியும் செய்யாமல் வணிகம் என்றாலே நஷ்டம். பங்கு சந்தை என்றாலே சூதாட்டம் என்ற மன நிலை இருந்தால், அதில் வெற்றி பெறுவதும் கடினம். இதுவே  செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம் எனலாம். ஆக பிரச்னைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது புத்திசாலிதனமான ஒன்றாக இருக்கும்.  6 தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்..! செல்வந்தர் ஆக தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்; புதிதாக கற்றுக் கொண்டே இருங்கள். அது உங்களை அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துசெல்லும். கற்றுக் கொள்வதோடு விட்டுவிடாமல் அதை செயலிலும் சரியாக செயல்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு பலரும் பலவிதமான வணிக திட்டங்களை கூறுவார்கள். இதை செய்தால் அவ்வளவு லாபம் கிடைக்கும். இது இவ்வளவு லாபம் கிடைக்கும். இது சூப்பரான பிசினஸ் என கூறுவார்கள்.இதை அவரிடத்தில் கேட்டு செய்த நண்பர்கள் கூட அதை வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஆனால் வணிகம் பற்றி பேசியவர் பேசிக் கொண்டுதான் இருப்பார். இந்த மன நிலையை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். அதுவே உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். கற்றுக் கொண்டதை செயல்படுத்த தொடங்குங்கள். இந்த ஆறு மனநிலைகளை ஒருவர் கொண்டிருந்தாலே, அவர் கோடீஸ்வரர் ஆவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார் என்று அர்த்தம். மேலும், பணத்தை பெருக்க கற்றுக் கொண்டுள்ளார் எனலாம். Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

கோடிகளில் பணம் சம்பாதிக்க 6 முக்கிய  மனநிலைகள்..  உங்களிடம் இருக்கா? Read More »

5 simple ways to multiply wealth easily – practical financial growth strategies.

செல்வத்தை பெருக்க 5 சுலப வழி முறைகள்…!

எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/ ஒருவர் செல்வந்தர் ஆவது ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை.  முக்கியமாக 5  வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் ஒருவர் சுலபமாக செல்வந்தர் ஆகிவிட முடியும்.  அந்த வழிமுறைகளை விரிவாக பார்ப்போம். 1 சொத்தின் மதிப்பு வளர்ச்சி..! ஒருவரிடம் எந்த வகையான சொத்துகள் (Assets) இருக்கின்றன? அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது மிக முக்கியம்.  ஒருவரிடம் ஒரு சொத்து இருக்கிறது என்றால் அதன் மதிப்பு எவ்வளவு என அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  பார்க்காத பயிர் பாழ் என்பது போல் கவனிக்காத சொத்தும் பாழ்தான். விவரம் தெரிந்த பெரும்பாலான முதலீட்டாளர்கள் மாத கடைசித் தேதிகளில் உற்சாகமாக இருப்பார்கள். காரணம்,  அப்போது அவர்களின் மொத்த சொத்தின் மதிப்பு என்ன என்பது பற்றிய கணக்கு போட்டு பார்த்திருப்பார்கள். அவர்கள் வைத்திருக்கும் தங்கம், பணம், சேமிப்புக் கணக்கில் இருக்கக்கூடிய இருப்பு, வைப்பு நிதி இருப்பு, பி.எஃப், பி.பி.எஃப்.  இருப்புத் தொகை, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இவற்றின் எல்லாவற்றின்  இன்றைய மதிப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அவர்கள் பார்த்திருப்பார்கள்.  ரியல் எஸ்டேட்டில் மட்டும் சரியாக மதிப்பு போட முடியாது. ஆனால், மற்ற முதலீடுகளின் மதிப்பை ஒரு முதலீட்டாளர் மதிப்பிட முடியும். சென்ற மாதத்துக்கும் இந்த மாதத்துக்கும் செல்வத்தின் பண மதிப்பு எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். கூடவே வங்கி சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, பி.பி.எஃப், தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் இப்படி எல்லாவற்றிலும் எவ்வளவு வளர்ச்சி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மாதந்தோறும் பார்க்க முடியவில்லை என்றாலும் மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டுக்கு ஒரு முறையாவது முதலீடுகளின் மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை கவனித்து வர வேண்டும். 2 வளரும் சொத்தை கண்டு பிடியுங்கள்..! மேலே கூறப்பட்டபடி அலசி ஆராய்ந்தால், மிக முக்கியமாக, ஏழு வருடங்களுக்கு முன் எவ்வளவு இருந்தது, ஐந்து வருடங்களுக்கு முன் எவ்வளவு மதிப்பு,  இப்படி வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  கடந்த ஐந்து வருடத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, எவ்வளவு வளர்ச்சியை கொடுத்தது, தங்கம் எவ்வளவு வளர்ச்சியை கொடுத்தது என  பார்க்க வேண்டும். இதேபோல், பி.பி.எஃப்., வைப்பு நிதி உள்ளிட்டவைகள் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.   அப்போதுதான் எந்தச் சொத்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை அறிந்து அதில் முதலீட்டை அதிகரித்து அதிக லாபம் ஈட்ட முடியும்.இப்போது, ஏதாவது ஒரு வகையில் பணம் வருகிறது என்றால் அதை, எந்தத்  திட்டத்தில் போட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்கிற முடிவை சுலபமாக எடுக்க முடியும்.முதலீட்டில் வளர்ச்சி என்பது மிக முக்கியமானதாகும். அதை சரியாக கணக்கீடு செய்தால், மேற்கொண்டு சரியான திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். 3 நீண்ட கால முதலீடு..! ஒரே இரவில் யாரும் பணக்காரர் ஆக முடியாது. ஒருவர் கடன் வாங்காமல் மற்றும் வாழ்க்கைமுறை செலவுகளை சுலபமாக செய்ய வேண்டும் என்றால் அவரின் முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைப்பது அவசியமாகும்.  நீண்ட காலத்தில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து வரும் ஆண்டுக்கு சராசரியாக போது 12-15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.  பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்பது ஒரு டைனமிக் முதலீடாகும். பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போது, லாபத்தை வெளியே எடுக்க வேண்டும்.  பங்குச் சந்தை கீழே இறங்கும்போது முதலீடு செய்ய வேண்டும்.  அடிப்படையில் வலுவான நல்ல தரமான பங்குகளில் இப்படி செய்யும் போது நீண்ட காலத்தில் நல்ல வரும் கிடைக்கும். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் லார்ஜ் கேப் பங்குகள் எனப்படும் மிகப் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம். பங்குச் சந்தையில்  அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை மேற்கொண்டு வருவார். அங்கு இருக்கும் நிதி மேலாளர் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை சரியாக கணித்து முதலீட்டை மேற்கொண்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவார். 4 சீரான முதலீட்டு முறை..! பங்குச் சந்தையின் செயல்பாட்டை சாதாரண சிறு முதலீட்டாளர்களால் சரியாக கணிப்பது என்பது மிகக் கடினமாகும். அந்த வகையில் பங்கு மற்றும் ஃபண்ட்களில் சீரான முதலீட்டு முறை என்கிற எஸ்.ஐ.பி முறையில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை கணிசமாக குறைக்க முடியும். மேலும் நீண்ட காலத்தில் நல்ல லாபத்தையும் பெற முடியும்.மொத்தப் பணம் இருந்தால், அதனை ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து விட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் என்கிற எஸ்டிபி முறையில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களுக்கு முதலீட்டை சீரான இடைவெளியில் குறிப்பிட்டக் காலத்துக்கு மாற்றுவது நல்லது. இப்படி செய்யும் போது பங்குச் சந்தையின் ரிஸ்க் வெகுவாக குறையும். 5 அஸெட் அலோகேஷன்…! ஒருவர் அதுவும் சிறு முதலீட்டாளர் எப்போது, எந்தச் சொத்து பிரிவு அதிக வருமானத்தை தரும் என்பதை கண்டுபிடிப்பது   கஷ்டமான காரியம் ஆகும்.   ஒருவர் அவரின் நிதி இலக்கு, ரிஸ்க் எடுக்கும் காலம், முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, வைப்பு நிதி, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பணத்தை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில், கிரிப்டோ, என்.எஃப்.டி., ஷேர் டிரேடிங் உள்ளிட்டவைகளை சிறு முதலீட்டாளர்கள் தவிர்ப்பது நல்லது. இவை மிக அதிக ரிஸ்க்கானவை மற்றும் புரிந்துகொள்ள மிகவும் கஷ்டமானவையாகும்.  எது எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து  முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் நல்ல வளர்ச்சியை பெற முடியும். அனுமதி இல்லாத சிட் ஃபண்ட். என்பது யாரோ ஒருவர் நடத்துகிறார். அவர் திடீரென்று காணாமல் போய்விடுவார். அல்லது அவரிடம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதனால், பிரச்னை நமக்குத்தான். அதனால், பதிவு செய்யாத சிட் ஃபண்ட்களில் ஒரு போதும் முதலீடு செய்யாதீர்கள். இறுதியாக, பண வளர்ச்சிக்கு நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும். அதுவும் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். மிக முக்கியமாக பொறுமை மிக முக்கியம்.  பங்குச் சந்தையின் உண்மை நிலையை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும்.  உங்கள் முதலீட்டுக் கலவையில் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்கள் இல்லை என்றால் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைக்காது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப முதலீடுகளை பிரித்து முதலீடு செய்து வருவது அவசியமாகும். பாக்ஸ் இந்திய நிறுவனப் பங்குகளே போதும்..!தற்போதைய நிலையில் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. வெளிநாடுகளை விட அடுத்த ஏழு, எட்டு வருடத்திற்கு இந்தியாவில் நல்ல வளர்ச்சி உள்ளது. இந்தியாவில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது லாபகரமாக இருக்கும். Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

செல்வத்தை பெருக்க 5 சுலப வழி முறைகள்…! Read More »

3 golden rules for multiplying wealth effortlessly – practical and proven financial tips.

செல்வத்தைப் பெருக்க உதவும் 3 தங்க விதிகள்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/ கையிலிருக்கும் பணத்தை பல மடங்காகப் பெருக்குவதற்கு மூன்று முக்கியமான தங்க விதிமுறைகளைப் பின்பற்றினால் போதும், நீண்டகாலத்தில் பெரிய கார்பஸ் தொகையை விரைவாகவும், எளிமையாகவும், சுலபமாகவும் உங்களால் சேர்க்க முடியும்.  அந்த மூன்று தங்க விதிகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.  1. முதலீட்டுத் தொகை மிக முக்கியம்..! பெரிய தொகுப்பு தொகையை உருவாக்கும் நிதி இலக்கைக் கொண்டிருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான். உதாரணமாக ஒருவருடைய வருமான ஆதாரத்தின்படி பார்க்கும்போது அவரால் மாதம் ரூ.25,000 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி  முறை மூலம் முதலீடு செய்ய முடியும். இருந்தாலும் அவர் வேண்டுமென்றே மாதம் ரூ.15,000 மட்டும்தான் முதலீடு செய்து வருவார். அவர்களுக்கு அந்த ரூ.10,000 இடைவெளி என்பது முதலீட்டில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பார். அவர் அறிந்து கொள்ளத் தவறிய தாக்கம் என்ன என்பதை நீங்கள் பாருங்கள். மாதம் ரூ.15,000 என்ற வகையில் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள். அது 15 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி அடைகிறது எனில், 20 வருட முடிவில் 2.3 கோடி ரூபாய் தொகுப்பு நிதியாக சேரும்.  ஆனால் 15,000 ரூபாயுடன் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் கூடுதலாக நீங்கள் சேர்த்து முதலீடு செய்து வந்தீர்கள் எனில் உங்களுடைய முதலீட்டின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத  அளவுக்கு உயர்ந்திருக்கும். மாதம் ரூ.15,000 மட்டும் எஸ்.ஐ.பியைத் தொடர்ந்து வந்தால் ரூ.2.3 கோடி கிடைக்கும் நிலையில் அதனை அதனுடன் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகித தொகையை கூடுதலாகச் சேர்த்து  முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகளில் ரூ.4.17 கோடி தொகுப்பு தொகையாகக் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டை  10 சதவிகிதம் படிப்படியாக அதிகரிப்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு சாத்தியமான காரியம்தான். ஏனெனில்  மாத சம்பளமாக இருந்தாலும் சரி, தொழில் செய்து சம்பாதிப்பவராக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வருமானம் குறைந்தது 10-15% ஏன் 20% கூட  செய்யுமே தவிர குறையாது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் முதலீட்டுத் தொகையைக் கூட்டி வந்தால்  தொகுப்பு தொகை அப்படியே இரண்டு மடங்காக வளரும். உதாரணத்துக்கு ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.50,000 என்றும் அவர்  இப்போது அவர் மாதம் 15,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார் என வைத்துகொள்வோம். இவருக்கு அடுத்த ஆண்டு சம்பளம் 10% அதிகரிக்கிறது என்றால் அவரின் சம்பளம் ரூ.50,000-லிருந்து ரூ.55,000 ஆக அதிகரிக்கும். அதேநேரத்தில் அவரின் எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையான ரூ.15,000-ஐ 10% சதவிகிதம் அதிகரித்தால் அது ரூ. 16,500 ஆக அதிகரிக்கும். சம்பளம் ரூ.5,000 அதிகரித்துள்ள எஸ்.ஐ.பி தொகையை ரூ.1,500 அதிகரிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை தானே? 2. முதலீட்டுக் காலம்..!  செல்வத்தைப் பெருக்குவதில் எவ்வளவு காலத்துக்கு நாம் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம் ஆகும். உதாரணமாக 15:15:15 என்ற விதிமுறைப்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துகொள்வோம். அதாவது மாதம் ரூ.15,000 என்ற வகையில்,  ஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகித வருமான வளர்ச்சி தரும் முதலீட்டுத் திட்டத்தில்  15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துகொள்வோம். அப்போது 15 ஆண்டுகள் முடிவில் உங்களுடைய  தொகுப்பு நிதி ரூ.1 கோடியாக இருக்கும். அந்த வகையில் பெரும்பாலானோருக்கு ரூ.1 கோடி என்பது மிகவும் எளிதாகச் சேர்க்கக்கூடிய ஒரு தொகைதான். ஆனால், நீங்கள் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் இந்த ரூ.1 கோடி  தொகுப்பு நிதியை 8 மடங்காகப் பெருக்க முடியும். எப்படி எனில் முதலீட்டுக் காலத்தை அதிகரிப்பது மூலம் இது சாத்தியமாகும். 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 30 ஆண்டுகளாக முதலீட்டுக் காலத்தை அதிகரித்தால் உங்களுடைய தொகுப்பு தொகை ரூ.8  கோடியாக  அதிகரித்திருக்கும். நீங்கள் முதலீடு செய்யப் போவது  15 ஆண்டுகள்தான் ஆனால் முதலீட்டை 30 ஆண்டுகள் வரை எடுக்காமல் வைத்திருந்தால் கூட்டு வட்டி வளர்ச்சி சக்தியினால் உங்களுடைய  தொகுப்பு தொகை 8 மடங்கு உயர்கிறது. நினைத்து பாருங்கள் ரூ.1 கோடி எங்கே இருக்கிறது?, ரூ.8 கோடி எங்கே இருக்கிறது?. இதுதான்  நீண்ட கால முதலீடு மற்றும் கூட்டு வளர்ச்சி ஏற்படுத்துகிற மேஜிக் தாக்கம் ஆகும். எனவே முதலீட்டை முடிந்த வரை நீண்ட காலத்துக்கு தொடர்ந்தால் பல மடங்காக செல்வத்தைப் பெருக்க முடியும்.  3.  வருமானம் எவ்வளவு?  நீங்கள் 15:12:15 என்ற விதிமுறைப்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதாவது மாதம் ரூ.15,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள். இங்கே முதலீட்டுக்கான  வருமானம் ஆண்டுக்கு 15 சதவிகிதம் என்பதற்கு பதில் 12 சதவிகிதம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால் உங்களுக்கு 15 ஆண்டு முடிவில் கிடைக்கக் கூடிய  கார்பஸ் ரூ.76 லட்சமாக மட்டுமே இருக்கும். வருமானத்தில் குறையும் 3 சதவிகிதம், கார்பஸில் 24 சதவிகிதத்தைக் குறைத்துவிடுகிறது. எனவே முதலீடு என்பது மிகவும் எளிமையான விஷயம்தான். ஆனாலும் அதை அவ்வப்போது மறு ஆய்வு செய்து நிர்வகிக்க வேண்டியது அவசியம். உங்களால் மறு ஆய்வு செய்ய முடியாதபட்சத்தில் நிதி ஆலோசகர்களின் உதவியை நாடலாம். உங்களுடைய முதலீட்டில் வருமானம் குறையும்போது அதற்கு என்ன செய்யலாம், முதலீட்டில் என்ன மாற்றங்களைச் செய்யலாம், எதில் கூடுதலாக முதலீடு செய்து வருமான இழப்பை ஈடு செய்யலாம் என்று நிதி ஆலோசகர்கள் வழிகாட்டுவார்கள்.  இந்த மூன்று விதிமுறைகளையும் உங்களுடைய முதலீட்டில் மறக்காமல் பின்பற்றி வந்தால் நீண்டகாலத்தில் பெரிய தொகுப்பு நிதியை சுலபமாக உங்களால் உருவாக்க முடியும். ஆல் த பெஸ்ட்..! Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | YoutuberI have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company Still Dreaming How to Start Your Investment?My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session Visit My Website for more Information www.sathishspeaks.comJoin My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.comCheck out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured Contact us – 7810079946 #1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

செல்வத்தைப் பெருக்க உதவும் 3 தங்க விதிகள்! Read More »

Scroll to Top
×